எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சீனியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பழுப்பு நிற சீனி சத்தோசவின் ஊடாக கிலோ ஒன்று 115 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என்று வர்த்தகத்துறைஅமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
லங்கா சீனி நிறுவனம் தற்போது இலாபத்தில் இயங்கி வருகிறது.எனவே அந்த லாபத்தின் பயனை பொதுமக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலேயே புதுவருடக்காலத்தில் சீனியின் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
லங்கா சீனி நிறுவனம் நேற்று வியாழக்கிழமையன்று 142 மில்லியன் ரூபாவை விற்பனை வருமானமாக பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மே மாதம் முதல் சத்தோச நிறுவனம் கிராமப்புறங்களில் நிறுவப்படும் என்றும் பந்துல தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.