கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.சிறைச்சாலை கைதிக்கு ஞாபக மறதி; திண்டாட்டத்தில் சுகாதார பிரிவு
யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதி போதைப்பொருள் பாவனையினால் ஞாபக சக்தி குறைபாடு காணப்படுவதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் கடந்த 11ம் திகதி மானிப்பாய் பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கடந்த 12ம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டடுள்ளார். அத்துடன் குறித்த நபருடன் மேலும் 7 கைதிகள் ஒரே சிறைக்கூடத்தில் காவல் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் 8 பேருக்கும் இன்று பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் குறித்த சந்தேக நபருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
சந்தேக நபருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் மணநீக்க வழக்கு இருப்பதனால் அங்கு சென்றமை தொடர்பிலும் ஆராயப்படுகிறது.
அத்துடன் சந்தேக நபர் மேசன் தொழிலாளிகளுடன் உதவிக்கு செல்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் சிறைச்சாலை நிர்வாகத்துக்கும் சுகாதாரத் துறைக்கும் சந்தேகநபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதில் பெரும் சிக்கல் நிலை உருவாக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.